எரிவாயுவிற்கு விலையை அதிகரிக்க அவசியமில்லை
Posted by Vimal on März 18th, 2021 02:35 PM | No Comment
சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு, வெங்காயம், ...
பல கொலைச்சம்பவங்கள் குறுகிய காலத்தில்!
Posted by Vimal on März 18th, 2021 02:27 PM | No Comment
கிளிநொச்சியில் குறுகிய காலத்தில் பல கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறித்தும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கும் விடயத்தில் காவல் துறை செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வடமாகாண பிரதி காவல் துறை மா அதிபருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவதுகிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கொலைச் சம்பவங்கள்மீள்குடியேற்றத்தின் பின்னரான பத்துவருட காலப்பகுதியில் தங்கள் நிருவாக ...
வீதியில் சுற்றித் திரிந்த இளம் யுவதிகளுக்கு நேர்ந்த கதி
Posted by Vimal on März 15th, 2021 11:33 PM | No Comment
கொழும்பு நகரில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த நான்கு யுவதிகளை கைது செய்துள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த யுவதிகளை தலா 50 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.கொழும்பு ...
மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு 15ஆக உயர்வு
Posted by Vimal on März 15th, 2021 12:30 AM | No Comment
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளதாக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.நேற்று மாத்திரம் வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.இவர்களில் 07 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கியவர்கள், என்பதுடன் மிகுதி ...
கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக்கூட்டம்
Posted by Vimal on März 15th, 2021 12:13 AM | No Comment
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியும், அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட வைக்கியல்ல பிரதேசத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த பயன்தரும் பல மரங்களையும், தோட்டங்களையும் அழித்துத் துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இவ்வாறு புகுந்த 3 இற்குமேற்பட்ட காட்டுயானைக் கூட்டத்தினால் அக்கிராம மக்கள் மிகுந்த அல்லோல ...
கேகாலையில்மின்னல் வேகத்தில் செயற்பட்ட பொலிஸார்
Posted by Vimal on März 11th, 2021 08:36 PM | No Comment
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பொலிஸ் பிரிவில் மன விரக்தியினால் தற்கொலை செய்து கொள்வதற்குத் தூக்கிட்டுக்கொண்ட இளைஞனின் உயிரை இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.அரநாயக்க பொலிஸ் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத 35 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அவரது தாய் உயிரிழந்த நிலையில் ...
இளம் வர்த்தகர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
Posted by Vimal on März 11th, 2021 07:44 PM | No Comment
கொழும்பு கொஹுவல, ஆசிரி மாவத்தையில் மோட்டார் வாகனத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த மோட்டார் வாகனம் மற்றும் சடலம் எரிந்த நிலையிலேயே காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.33 வயதுடைய இளம் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நேற்று இரவு 11.30 ...
பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
Posted by Vimal on März 10th, 2021 06:02 PM | No Comment
கொழும்பு – டாம் வீதியில் தலை இல்லாமல் பயணப் பை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.நேற்றைய தினம் குறித்த பெண்ணின் டி.என்.ஏ பரிசோதனை வெளியானது. அதில் அவருடைய அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.இதையடுத்து அவருக்கு நேற்றைய தினமே பிரேதபரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் நேற்று இரவு கையளிக்கப்பட்டது.யாத்திரை செல்வதாக கூறிச்சென்ற குருவிட்ட பகுதியைச் ...
பெருந்தொகை கஞ்சாவை அதிரடியாகக் கைப்பற்றிய கடற்படை
Posted by Vimal on März 10th, 2021 05:49 PM | No Comment
கற்பிட்டி சோமைத்தீவு பகுதியில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிலோ 125 கிராம் கேரளா கஞ்சா கற்பிட்டி விஜய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.மேலும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று மாலை குறித்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.இதன்போதுசந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.அத்தோடு கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா ...