
தென்னிந்திய திரைத்துறையின் பிரபல பாடகரும் நடிகருமான “பாடுநிலா” எஸ்.பி. பாலசுப்பிரமணியம் .25-09-20.இன்று சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் காலமானார்.
ஆகஸ்ட் 5ம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய எஸ்.பி.பி ஒரு மாத காலத்துக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.
அண்மைய நாட்களில் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென மோசமான கட்டத்தை அடைந்த பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
நெல்லூரில் 1946ம் ஆண்டு சிறிபதி பண்டிதாரியுல பாலசுப்பிரமணியம் ஆக பிறந்த இவர் 1967ம் ஆண்டு தெலுங்கில் “எமியே விந்தா மோகம்” என்ற பாடல் மூலமும்
தமிழில் “ஆயிரம் நிலவே வா” பாடல் மூலமும் பாடகராக அறிமுகமாகி 16 மாெழிகளில் நாற்பதாயிரம் பாடல்களை பாடியுள்ளார்.
1969ம் ஆண்டு தெலுங்கில் “பெல்லந்தே நூரெல்ல பந்த” என்ற திரைப்படத்திலும், 1971ம் ஆண்டு தமிழில் “மொஹமட் பின் துக்லக்” திரைப்படத்திலும் சிறுவேட
நடிகராக அறிமுகமான எஸ்.பி.பி, நாயகனாகவும், துணை நடிகராகவும் 50கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல உயரிய விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.
இறுதியாக “என்னோட பாஷா” என்ற பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
