சாட்டிலைட்டில் இருந்தும் தெரியுது அபுதாபி தீவில் 3 கி.மீ.க்கு கோடீஸ்வரரின் பெயர்
August 8th, 2011 06:50 PM | உலகம் | 2 Comments
தன் பெயரை எதிலாவது எழுத வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. மரத்தில், பஸ் சீட்டில், மலை உச்சியில்.. இப்படி பொறித்து வைப்பார்கள். அபுதாபி கோடீஸ்வரர் ஒருவர் தன் பெயரை தன் சொந்த தீவில் 3 கி.மீ. தூரத்துக்கு எழுதி வைத்திருக்கிறார்.
ஐக்கிய அரபு குடியரசின் அபுதாபி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் ஹமத் பின் ஹம்டன் ...
ராணியை சித்திரவதைக்குள்ளாக்கிய மன்னர் _இரகசிய தொடர்பு
August 8th, 2011 05:52 PM | உலகம் | No Comment
அமைச்சருடன் ,இரகசியத் தொடர்பு வைத்ததாக கைது செய்யப்பட்ட சுவாசிலாந்து நாட்டின் ராணி அந்நாட்டு மன்னரும் ராணியின் கணவருமான மஸ்வதி தன்னை சிறை வைத்து சித்திரவதை செய்து வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுவாசிலாந்து நாட்டின் மன்னர் மஸ்வதியின் 12 ஆவது மனைவியான நொத்தாண்டோ டியுப் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மொடல் அழகியாவார்.
இவர் அந்நாட்டு முன்னாள் நிதி அமைச்சருடன் இருக்கும் ...
ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா?பரபரப்பு
August 8th, 2011 05:30 PM | featured | 1 Comment
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இருந்தது போல் கிருஷ்ணகிரி அருகேயுள்ள பழமை மிக்க கற்கோவில்களில் தங்க புதையல் இருப்பதாக ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் உள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொல் பொருள் துறையினர் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.
தங்க புதையல் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பூட்டி கிடந்த ...
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
August 7th, 2011 05:29 PM | featured | No Comment
செவ்வாய்க் கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பே சூரிய குடும்பத்தில் நான்காவது கிரகமாக கருதப்படும் செவ்வாய்க் கிரகத்தில், தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர்.
இருந்த போதிலும், அது உறைந்து இருப்பதாகவே இதுவரை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், செயற்கைக்கோள் மூலம் மார்ட்டியன் எரிமலை பகுதியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், செவ்வாய் கிரகத்தில் ...
நித்தியானந்தா சீடர்கள் 250 பேர் உண்ணாவிரதம்
August 7th, 2011 05:03 PM | உலகம் | No Comment
நித்தியானந்தா - ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியானது சில பத்திரிகைகளில் ஆபாச படங்கள் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தா சீடர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். பொலிசிலும் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்தியானந்தா பற்றி அவதூறு பரப்பி வரும் தொலைக்காட்சி, பத்திரிகைகளை ...
இணுவில் பகுதியில் சங்கு சக்கரம் கொண்ட வெள்ளை நாகம்
August 7th, 2011 07:34 AM | featured | 1 Comment
இணுவில் பகுதியில் இணுவில் இளந்தாரி வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றிலிருந்து சங்கு சக்கரம் கொண்ட வெள்ளை நாக பாம்பொன்றை அப்பகுதி இளைஞர்கள் பிடித்துள்ளனர்.
இந்த பாம்மை அதிக எண்ணிக்கையான மக்கள் பார்வையிட்டு வருவதுடன், அந்ந பாம்பு அருகிலுள்ள ஆலயத்தின் பாம்பென அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் இவ்வாறான ஒரு வெள்ளை ...
உலகைக் காப்போம் சைக்கிள் சுற்றுலா விரைவில் யாழில் இருந்து ஆரம்பம்
August 7th, 2011 07:30 AM | featured | 2 Comments
சுற்றுச்சூழலை அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு உலகைக் காப்பாற்றுவோம் எனும் தொனிப் பொருளில் சைக்கிள் சுற்றுலா ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
புவி வெப்பமடைவதால் உலக அழிவுகள் ஏற்படுகின்றன. இரசாயன கழிவுகளால் பூமிக்கும் மனிதர்களுக்கும் தீங்குகள் ஏற் படுகின்றன. அவற்றை ஈடுசெய்யும் பொருட்டே இந்த சைக்கிள் சுற்றுலாவினை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார் இதன் ஏற்பாட்டாளர் கா.ராஜரட்ணசிங்கம் ...
குடாநாட்டில் டெங்கு நோய் அபாயம்
August 6th, 2011 11:53 PM | featured | No Comment
குடாநாட்டில் மீண்டும் டெங்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதால் டெங்கு நுளம்பு பெருகும் வகையிலான ஏதுக்களை அகற்றி முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு யாழ். சுகாதார சேவைகள் பணிமனை, மக்களை அறிவுறுத்தியுள்ளது.
யாழ்.மாவட்டதில் இம்மாத ஆரம்பத்தில் டெங்கு நோயாளர்கள் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் இணுவிலில் ஒருவரும் நல்லூரில் மூவரும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் நால்வரும் உள்ளூர் நுளம்புக்கடிமூலம் நோயைப் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் அதாவது ...
06.08.1930 ஆம் ஆண்டில் உதயமான இந்த வீரகேசரி
August 6th, 2011 11:35 PM | இலங்கை | 1 Comment
"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்'' என்கின்ற முதுமொழி அனுபவித்து கூறப்பட்டதாகும். இந்த அற்புத வாக்கியத்தை நாம் ஒவ்வொருவரும் உணருவது ""பத்திரிகை'' எனும் நாளிதழ்களின் மூலமே. அந்த வகையில் தலைநகர் கொழும்பில் 06.08.1930 ஆம் ஆண்டில் உதயமான இந்த வீரகேசரி தனது ஒன்பதாவது தசாப்தத்தில் அதாவது 81 ஆம் ஆண்டில் தடம் பதித்து நிற்பது நம் தமிழர்கள் அனைவருக்குமே ...
குவைத்தில் 4 இந்தியர்களை சுட்டுக்கொன்ற பொலிஸ்
August 6th, 2011 08:50 PM | உலகம் | No Comment
குவைத் நாட்டில் மனநிலைப் பாதிக்கப்பட்டவரால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நரேஷ்குமார், சித்தூரை சேர்ந்த ராமணய்யா மற்றும் மாசாகிரி ஓபுல்ரெட்டி, ராம்பீம் ஆகிய நான்கு பேரும் குவைத் நாட்டில் வேலை செய்து வந்தனர்.
கடந்த 1 ம் திகதியன்று, குவைத்தில் ரம்ஜான் நோன்பு துவங்கியது. அன்று மாலை ...